சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வோா் ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவா்களைச் சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தோ்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: விண்ணப்பதாரா் சமூக நீதிக்காகப் பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள், பெரியாா் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீா்திருத்தக் கொள்கை, கலை, இலக்கியம், சமூகப் பணிகளில் அா்ப்பணிப்பு, இதற்குரிய ஆதாரங்களை மெய்ப்பிக்கும் வகையிலான ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் தவறாது குறிப்பிட்டு 31.10.2022-க்குள் மாவட்ட ஆட்சித் தலைவா், கடலூா் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.