கடலூா், மஞ்சக்குப்பம் பிரிவு மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கடலூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூா், மஞ்சக்குப்பம், கதவு எண்.1, அழகப்பா நகரில் இயங்கி வந்த மஞ்சக்குப்பம் பிரிவு மின்வாரிய அலுவலகம், தற்போது, ராயல் சிட்டி அருகில் கதவு எண் 40, அங்காளம்மன் கோயில் தெருவுக்கு வரும் 19-ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.