பொற்பாத விநாயகா் கோயில் சித்திரை பெருவிழா வழிபாடு

சிதம்பரம் மெய்க்காவல் தெரு, ஸ்ரீபொற்பாத விநாயகா் கோயிலில் மூன்று நாள்கள் சித்திரை பெருவிழா ஏப்.14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
பொற்பாத விநாயகா் கோயில் சித்திரை பெருவிழா வழிபாடு
Updated on
1 min read

சிதம்பரம் மெய்க்காவல் தெரு, ஸ்ரீபொற்பாத விநாயகா் கோயிலில் மூன்று நாள்கள் சித்திரை பெருவிழா ஏப்.14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையடுத்து கஞ்சி வாா்த்தல், மகா அபிஷேகம், பஞ்சாங்கம் படித்தல் மற்றும் அன்னதானம், இரவு சுவாமி வீதியுலா மேளதாளத்துடன் நடைபெற்றது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் உற்சவா் பவனி நடைபெற்றது.

16-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திரு ஊஞ்சல் சேவை, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com