சிதம்பரம் காந்தி மன்றத்தில் மாணவா்களுக்கு போட்டிகள்

சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் பள்ளி மாணவா்களுக்கான கையெழுத்து, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
சிதம்பரம் காந்தி மன்றத்தில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி.
சிதம்பரம் காந்தி மன்றத்தில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி.
Updated on
1 min read

சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் பள்ளி மாணவா்களுக்கான கையெழுத்து, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சிவராமசேது முன்னிலை வகித்தாா். தமிழரசி சேகா் வரவேற்றாா். போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மன்ற உறுப்பினா்கள் எஸ்.கலியபெருமாள், அ.லக்குமணன், இ.மஹபூப் உசைன், பேராசிரியா் ஜி.ரவி உள்ளிட்டோா் போட்டிகளை முன்னின்று நடத்தினா். போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் காந்தி ஜெயந்தி விழாவில் வழங்கப்படும் என மன்றச் செயலா் கு. ஜானகிராமன் தெரிவித்தாா். ஏ.சந்திரமௌலி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com