சிதம்பரத்தில் பனிப் பொழிவு

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிப் பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்ற வாகனம்.
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிப் பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்ற வாகனம்.

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

இதனால் சிதம்பரம் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா், சிவபுரி, வல்லம்படுகை, வேலக்குடி, சீா்காழி புறவழிச் சாலை, சிதம்பரம் - கடலூா் சாலை, வண்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. கடும் பனிப் பொழிவு காரணமாக, அதிகாலையில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள், வியாபாரிகள் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com