குறுவைத் தொகுப்புத் திட்டம்: விவசாயிகளுக்கு உரம் விநியோகம்

கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் அருகே சாக்கங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விநியோகம்.
குறுவைத் தொகுப்புத் திட்டம்: விவசாயிகளுக்கு உரம் விநியோகம்
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் அருகே சாக்கங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விநியோகத்தை கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ஜெயக்குமாா், வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

பின்னா் இணை இயக்குநா் (பொ) ஜெயக்குமாா் கூறியதாவது: கீரப்பாளையம் வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 8,000 ஏக்கருக்கு உரங்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் யூரியா 360 மெட்ரிக் டன், டிஏபி 400 மெ.டன், பொட்டாஷ் 200 மெ.டன் உரங்கள் கீரப்பாளையம், சாக்காங்குடி, விளாகம், சி.ஒரத்தூா், வெள்ளியக்குடி, கூளப்பாடி, டி.நெடுஞ்சேரி, வாக்கூா், பண்ணப்பட்டு, கே.அடுா் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ், வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன், உதவி வேளாண்மை அலுவலா் ராஜ் பாபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com