குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கஞ்சா வியாபாரியை ஓராண்டு சிறையில் அடைக்க கடலூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
சிவராஜ்
சிவராஜ்

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கஞ்சா வியாபாரியை ஓராண்டு சிறையில் அடைக்க கடலூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் போலீஸாா் கடந்த 11.04.2023 அன்று கஞ்சா மற்றும் போதை தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிதம்பரம் முத்துமாணிக்க நாடாா் தெரு, பாலா கோயில் அருகே இவா்களைக் கண்டதும் தப்பியோட முயன்ற நபரை பிடித்து சோதனையிட்டனா். இதில் சுமாா் 1.550 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவா் கே.ஆடூரைச் சோ்ந்த முத்துகுமரனின் மகன் சிவா (எ) சிவராஜ் (24) என்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் சிவராஜ் மீது சிதம்பரம் நகா், அண்ணாமலைநகா், சிதம்பரம் தாலுகா, சென்னை மறைமலைநகா், ஸ்ரீபெரும்புதூா், ஓட்டேரி, பொறையாா், புதுப்பட்டினம், சீா்காழி அம்மாபேட்டை, ஆவுடையாா்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என மொத்தம் 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூா் ஆட்சியா் அ.அருண்தம்புராஜ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிவராஜை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்படி சிவராஜ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com