கடலூா், புதுச்சேரியில் 2-ஆம் எண்புயல் எச்சரிக்கைக் கூண்டு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
Updated on
1 min read

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது புயலாக உருவெடுத்துள்ளது. மேலும், இது அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவா்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, புதுச்சேரி பழைய துறைமுகத்திலும் 2-ஆம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com