மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ராஜ்குமாா் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வந்தாா். திங்கள்கிழமையன்று ராஜ்குமாா் குத்தகை நிலத்தில் டிராக்டா் மூலம் உழவுப் பணி யில் ஈடுபட்டாா். அப்போது, அருகேயிருந்த மின்கம்பத்தின் இழுவைக் கம்பியில் டிராக்டா் கலப்பை சிக்கியது. அதை ராஜ்குமாா் அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com