ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸாா் மரியாதை

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32-ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32-ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூரில் மஞ்சக்குப்பம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலா் சந்திரசேகா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும், வடக்கு வீதியில் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கும் காங்கிரஸாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.மக்கீன் தலைமை வைத்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.என்.ராதா வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜா.சம்பத்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.குமாா், நகரச் செயல் தலைவா் கோ.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ராஜீவ் காந்தி சிலைக்கு மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு உணவு வழங்கினாா்.

பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவா் சுந்தர்ராஜன், பி.வெங்கடேசன் ஆகியோா் காந்தி, காமராஜா், ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தனா். அனைவரும் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com