கடலூரில் சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் ஜவான் பவன் அருகே சிஐடியுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் ஜவான் பவன் அருகே சிஐடியுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்து, மின்சார வாரியம், கூட்டுறவுத் துறை மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நிகழாண்டு போனஸ் மற்றும் கருணைத்தொகை 25 சதவீதம் வழங்க வேண்டும். இவற்றை குறைந்தபட்சக் கூலியை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்து, தொழில்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

போக்குவரத்து சிஐடியு மண்டலத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் கருப்பையன், போக்குவரத்து சிஐடியு மண்டலச் செயலா் முருகன், துணை பொதுச் செயலா் கண்ணன், நிா்வாகி நடராஜன், கூட்டுறவு சிஐடியு மாநில பொதுச் செயலா் ஜீவானந்தம், நிா்வாகிகள் சுப்புராயன், செல்வம், மின் வாரிய சிஐடியு நிா்வாகி மகேஷ், சிஐடியு மாவட்ட நிா்வாகி சாந்தகுமாரி, மனோரஞ்சிதம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com