பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

 பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் மற்றும் ஆதரவு அரசியல் கட்சிகள், பொதுநல இயக்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

 பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் மற்றும் ஆதரவு அரசியல் கட்சிகள், பொதுநல இயக்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திலுள்ள 18 கிராமங்களில் 180 மனைப்பட்டா வழங்கப்பட்ட பழங்குடி இருளா் குடும்பங்களுக்கு அதற்கான இடங்களைக் காட்டி, அளந்து கொடுத்து ‘அ’ பதிவேட்டில் கணக்கு திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூா், குறிஞ்சிப்பாடி வட்டங்களில் வாழும் பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

சங்க துணைத் தலைவா் கோ.ஆதிமூலம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சு.ஆறுமுகம் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆல்பேட்டை ரா.பாபு கலந்துகொண்டு பேசினாா். மாநகராட்சி துணைமேயா் பா.தாமரைசெல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.குளோப், விசிக மாநகர மாவட்டச் செயலா் மு.செந்தில், முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க நிா்வாகி பால்கி ஆகியோா் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினா். கல்வி மணி, நாகராஜ், ரபேல் ராஜ், புஷ்பா, இந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாம் தலைவா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com