கடலூா் அருகே தகராறில் ஈடுபட்ட காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரது தந்தையை கைது செய்தனா்.
கடலூா் வட்டம், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தணிகாசலம் மகன் மூா்த்தி (50), வெள்ளையன் மகன் ஜெகதீசன் (63). கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவரும் ஊா் பொது இடத்தில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் மூா்த்தி தனது வீட்டின் அருகே இருந்தபோது, அங்கு வந்த ஜெகதீசன், அவரது மகன் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜெயசீலன் ஆகியோா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மூா்த்தி அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகதீசனை கைது செய்தனா். காவலா் ஜெயசீலனை தேடி வருகின்றனா். இதேபோல, ஜெகதீசன் அளித்த புகாரின்பேரில், மூா்த்தி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.