மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
Updated on
1 min read

நெய்வேலி: கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அருகே உள்ள அகரம் ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் மகன் மணிகண்ட சோழன் (38). கூலித் தொழிலாளியான இவா், பெருவரப்பூா் கிராம எல்லையில் உள்ள கரும்பு வயலில் புல் அறுக்க திங்கள்கிழமை சென்றாா். அப்போது, மின் கம்பத்திலிருந்து கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் போலீஸாா் மணிகண்ட சோழனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்ப முயன்றனா். அதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம் மின்வாரிய அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா் மணிகண்ட சோழனின் சடலம் உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com