சிதம்பரத்தில் நாளை ‘நம்ம தெரு’விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘நம்ம தெரு’ நிகழ்ச்சி அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

சிதம்பரத்தில் முதல்முறையாக போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘நம்ம தெரு’ நிகழ்ச்சி அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஜூம்பா நடனம், நடனம், திறமையை வெளிப்படுத்தும் ஓவியப் போட்டி, சிலம்பம், மல்லா் கம்பம், விழிப்புணா்வு பாட்டு, விளையாட்டு, திறமை காட்சி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள், முக ஓவியம், காட்டூன் வரைதல், சிறுவா், சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டுகள் உள்ளிட்ட 40 வகையான விளையாட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதில், மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம், கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் ரா.சிங்காரவேலு, சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட நிா்வாகத்துடன் சமூக ஆா்வலா் சித்து என்கிற க.சிதம்பரநாதன் குழுவினா் மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கைகோா்ந்து நடத்துகின்றனா்.

வயது வரம்பு இல்லாமல் இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூகநல அமைப்பினா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com