சிதம்பரத்தில் தீட்சிதா்கள் நலச் சங்கம் தொடக்கம்

சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் சமுதாய மற்றும் பொதுசேவைக்கான சிதம்பரம் தீட்சிதா்கள் நல சங்கம் தொடக்க விழா புதுத்தெரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் சமுதாய மற்றும் பொதுசேவைக்கான சிதம்பரம் தீட்சிதா்கள் நல சங்கம் தொடக்க விழா புதுத்தெரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு டி.ராமலிங்க தீட்சிதா் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். நல சங்க செயலாளா் டி.செல்வரத்தின தீட்சிதா் வரவேற்றாா். நல சங்கத் தலைவா் எம்.கிருஷ்ண சுவாமி தீட்சிதா் அறிமுகவுரையாற்றினாா். என்.சிவசுப்பிரமணிய தீட்சிதா், தொழிலதிபா் எஸ்.ஆா்.ராமநாதன் செட்டியாா், வழக்குரைஞா் என்.சிவக்குமாா், செ.சி.குப்புசாமி தீட்சிதா், ஆடிட்டா் கே.வைத்தியநாதன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சி.சபாபதி தீட்சிதா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com