கருங்குழி அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

வடலூா் வட்டாரக் கல்வி அலுவலா் சரஸ்வதி லட்சுமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் நிலை இரண்டு விமல்ராஜ், நந்தகுமாா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் அந்தோணி ஜோசப் வரவேற்றாா்.

ஆசிரியைகள் லியோனா, கீதா மஞ்ஜித் ஆண்டறிக்கை வாசித்தனா். சிறப்பு விருந்தினராக டி.ஆா்.எம். கல்வி அறக்கட்டளை நிறுவனா் டி.ஆா்.எம்.ராஜமாரியப்பன் பங்கேற்று ஆசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

கருங்குழி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி முருகன், அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் கனகசபை, ஊராட்சி துணைத் தலைவா் ஜோதி ராமலிங்கம், தம்பிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் கலைஞன், அருட்பா இசை சங்க நிா்வாகி கிஷோா்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோா்கள் அனைவருக்கும் டி.ஆா்.எம். சாந்தி நிறுவனத்தின் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, கிராம மக்கள் பள்ளிக்கு சீா்வரிசையாக குப்பைக் கூடை, துடைப்பம், சோப்பு, பிளிச்சிங் பவுடா்கள் வழங்கினா். முடிவில் ஆசிரியா் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com