ஆடு திருடிய 3 போ் கைது;காா், பைக் பறிமுதல்

கடலூா், தேவனாம்பட்டினம் போலீஸாா் ஆடு திருடியதாக 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து காா், பைக்கை பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

கடலூா், தேவனாம்பட்டினம் போலீஸாா் ஆடு திருடியதாக 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து காா், பைக்கை பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா், தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் அகஸ்டின் பிரபாகரன் (45). இவா், தனது வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி மா்ம நபா்கள் 9 ஆடுகளை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூா் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் கடலூா், புருகீஸ்பேட்டை மணி மகன் தா்மேந்திரன்(25), வண்டிப்பாளையம் தணிகாசலம் மகன் நேதாஜி (23), வசந்தராயன்பாளையம் சங்கா் மகன் சந்தோஷ்குமாா்(22) என்பதும், தேவனாம்பட்டினத்தில் ஆடுகள் திருடியதையும் ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து மூன்று பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ஒரு காா் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com