குடும்பத் தகராறில் தம்பதி தீக்குளிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குடும்பத் தகராறில் தம்பதியா் சனிக்கிழமை தீக்குளித்தனா்.
அருள், முத்துலட்சுமி.
அருள், முத்துலட்சுமி.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குடும்பத் தகராறில் தம்பதியா் சனிக்கிழமை தீக்குளித்தனா்.

பண்ருட்டி வட்டம், தோப்புகொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்(35). இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவா்களுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மது அருந்தும் பழக்கமுள்ள அருள் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்வதாகக் கூறினராம். அப்போது, முத்துலட்சுமி திடீரென தீக்குச்சியை கொளுத்தியதில் இருவா் மீதும் தீப்பிடித்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அந்தப் பகுதியினா் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு இருவரும் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com