ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
தினேஷ்குமாா்
தினேஷ்குமாா்
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கம்மாபுரம் ஒன்றியம், வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தெய்வமணி மகன் தினேஷ்குமாா் (14). கம்மாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (8), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை கம்மாபுரம் பெரிய ஏரியில் குளித்தனா். அப்போது, இருவரும் திடீரென நீரில் மூழ்கினா். சிறுவா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா், சிறுவா்கள் இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com