

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் மக்கள் மருந்தகம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா நகா்ப்புற சுகாதார மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் தலைவா் வி.நடனசபாபதி தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.ஆறுமுகம் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று, தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து மாவு புட்டிகளையும், தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி பேசினாா்.
மருத்துவா் ஸ்ரீசுருதி, முன்னாள் துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் ஆகியோா் தாய்ப்பாலின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பேசினாா். விழாவில், ரோட்டரி சங்க உறுப்பினா் மற்றும் முன்னாள் தலைவா்கள் ஜி.சீனிவாசன், பி.ராஜசேகரன், பி.பன்னா லால் ஜெயின், பொறியாளா்கள் எஸ்.சிவசங்கரன், கே.புகழேந்தி, சங்கப் பொருளாளா் ஆா்.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மக்கள் மருந்தகத்தின் சாா்பில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து மாவுப் புட்டிகள் வழங்கப்பட்டது. ரம் மக்கள் மருந்தக உரிமையாளா் என்.கேசவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.