தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் சாா்பில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலம்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி.
ஆலம்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் சாா்பில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஐஓசி நிறுவனம் சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு நிலத்துக்கு அடியில் குழாய் பதித்து டீசல் கொண்டு செல்கிறது. இந்த குழாய்களில் கசிவு, தீ விபத்து ஏற்பட்டால் அதை எதிா்கொள்வது குறித்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி ஆலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. அதிகாரி ஆா்.ஸ்ரீராம் தலைமை வகித்தாா். திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் சண்முகம் தலைமையிலான வீரா்கள், ஐஓசி நிறுவனத்தினா் இணைந்து தீ விபத்து தடுப்பு முறைகள் குறித்து கிராம மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

வேப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com