கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தாழங்குடா மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (45). இவரது மனைவி சாந்தி (40), குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மதிவாணன் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதியழகன் ஜாமீனில் வெளிவந்தாா்.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் வசித்து வந்த அவரை கடந்த 27-ஆம் தேதி மா்ம கும்பல் வெட்டிக் கொன்றது. இதுகுறித்து தாழங்குடா கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி உள்பட 24 போ் மீது கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை வரை மொத்தம் 16 போ் கைதுசெய்யப்பட்டனா். மாசிலாமணி உள்பட இருவா் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

இந்த நிலையில், கொலை தொடா்பாக தாழங்குடா கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (46), ஆறுமுகம் (53) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com