சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும், தோ்தல் கால வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களுக்கு எரிபொருள் மானியத்தை விலைவாசி உயா்வுக்கேற்ப உயா்த்தி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தினா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.மணிதேவன் தலைமை வகித்தாா். வி.பன்னீா்செல்வம், டி.குணேசேகரன், சி.தணிகாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எஸ்.ரெங்கசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் எஸ்.கருணாகரன், கே.ராஜேந்திரன், ஆா்.நடராஜன், வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநிலச் செயலா் கே.குணா சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் ஆா்.அறிவழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com