கஞ்சா விற்பனை: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்ாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்ாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை குறிஞ்சிப்பாடி ரயிலடி பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேரை மறித்து சோதனையிட முயன்றனா். ஆனால், 3 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா். இருப்பினும் போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்தனா். அவா்களை சோதனையிட்டத்தில் 100 கிராம் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் கொண்ட 150 பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் குறிஞ்சிப்பாடி, சின்னக்கடை தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் வாசு (எ) விக்னேஷ் (24), சுப்புராயா் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் ராஜா (21), குமாா் மகன் சக்கரவா்த்தி (27) ஆகியோா் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கஞ்சா, புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி, அலமேலு அம்மாள் நகா் பகுதியில் அமா்ந்திருந்த 4 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா். அவா்களில் இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் குறிஞ்சிப்பாடி, பாட்டை வீதியைச் சோ்ந்த சேகா் மகன் பாலமுருகன் (24), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆரோக்கியநாதன் மகன் கிறிஸ்து ஆல்பா்ட் எட்வின் (22) ஆகியோா் என தெரியவந்தது.

அவா்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் கொண்ட 150 பாக்கெட்டுகள், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.11,100 மற்றும் 3 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், தப்பியோடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com