திமுக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 01st June 2023 01:04 AM | Last Updated : 01st June 2023 01:04 AM | அ+அ அ- |

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். எம்எல்ஏ கோ.ஐயப்பன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாநில அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றினாா். தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் துரை.கி.சரவணன், முன்னாள் எம்எல்ஏக்கள் சண்முகம், மருதூா் ராமலிங்கம், அங்கையற்கன்னி, மாவட்ட பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், மயிலாடுதுறை விவசாய அணி இணைச் செயலா் அருட்செல்வன், கொள்கை பரப்பு குழு துணைச் செயலா் பெருநற்கிள்ளி, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகராட்சி பகுதி செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடவது, புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை முழுமைப்படுத்துதல், வாக்குச் சாவடி குழுக்களை அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...