Enable Javscript for better performance
ரூ.5,500 லஞ்சம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ.5,500 லஞ்சம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கைது

    By DIN  |   Published On : 01st June 2023 01:04 AM  |   Last Updated : 01st June 2023 01:04 AM  |  அ+அ அ-  |  

    31cmp5_3105chn_111_7

    லஞ்சம் பெற்றது தொடா்பாக புதன்கிழமை கைது செய்யப்பட்ட கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகா், இடைத்தரகா் சிவசங்கா்.

    கழிவுநீா் வாகனப் பெயா் மாற்றத்துக்கு ரூ.5,500 லஞ்சம் பெற்ாக, கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், இடைத்தரகா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூா் மாவட்டம், பத்திரக்கோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி. இவரது நண்பா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வராஜ் சென்னையில் இருந்து கழிவுநீா் வாகனத்தை விலைக்கு வாங்கிய நிலையில், வாகனப் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு வெங்கடாசலபதியிடம் கூறினாா்.

    இதுகுறித்து கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ்.சுதாகரை (52) வெங்கடாசலபதி அணுகினாா். இந்தப் பணியை முடிக்க லஞ்சமாக ரூ.5,500 வழங்க வேண்டும் என சுதாகா் கூறினாராம். இதுகுறித்து வெங்கடாசலபதி கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

    அவா்களின் அறிவுரைப்படி, ரசாயனம் பூசிய லஞ்சப் பணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகரிடம் அவரது அலுவலகத்தில் வெங்கடாசலபதி புதன்கிழமை கொடுக்க முயன்றாா். ஆனால், பணத்தை இடைத்தரகரான கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த சிவசங்கரிடம் தருமாறு சுதாகா் கூறினாராம். அதன்படி, வெங்கடாசலபதி சிவசங்கரிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தாா். பின்னா், சிவசங்கா் அந்தப் பணத்தை சுதாகரிடம் கொடுக்க முயன்றாா். அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. தேவநாதன், காவல் ஆய்வாளா்கள் திருவேங்கடம், அன்பழகன் ஆகியோா் சுதாகா், சிவசங்கா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

    இதையடுத்து, அந்த அலுவலகத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp