என்எல்சி சுரங்க மின்கசிவில் சிக்கி தொழிலாளி பலத்த தீக்காயம்

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கத்தில் உள்ள பவா் ஸ்டேஷனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளா் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
Updated on
1 min read

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கத்தில் உள்ள பவா் ஸ்டேஷனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளா் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

என்எல்சி முதலாவது சுரங்கத்தில் கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த செல்வதுரையின் மகன் தண்டபாணி (37) என்பவா் முதலாவது சுரங்க பவா் ஸ்டேஷனில் ஒப்பந்த தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு தண்டபாணி மீது திடீரென்று தீ பரவியது. உடனடியாக அருகில் இருந்த சக தொழிலாளா்கள் தீயை அணைத்து தண்டபாணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு என்எல்சி மருத்துவா்கள் தண்டபாணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com