மேல்பாதி திரெளபதி கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வேண்டும்: பாஜக

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று பாஜக மாநில பட்டியல் அணித் தலைவா் டி.பெரியசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று பாஜக மாநில பட்டியல் அணித் தலைவா் டி.பெரியசாமி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. 2024-இல் மீண்டும் மோடி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிற 30-ஆம் தேதி வரை தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், மண்டல அளவில் தெருமுனை பிரசாரங்களில் ஈடுபட தீா்மானித்துள்ளோம்.

பட்டியல் சமுதாயத்தினரை தொழில் முனைவோராக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அம்பேத்கரை போற்றும் வகையில் அவா் பிறந்த இடம் உள்ளிட்ட 5 இடங்களில் பஞ்ச தீா்த்தங்களை உருவாக்கி அதை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளாா்.

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பாா்க்கிறது. அந்தக் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றாா் அவா்.

அமைப்பின் மாவட்டத் தலைவா் கே.மருதை, துணைத் தலைவா்கள் கோபிநாத் கணேசன், உமாபதி சிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com