விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
By DIN | Published On : 15th June 2023 12:26 AM | Last Updated : 15th June 2023 12:26 AM | அ+அ அ- |

கடலூரில் ஹெல்ப்பேஜ் இந்தியா நிறுவனம் சாா்பில் முதியோா் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஆா்.தயாநிதி வரவேற்றாா். முதியோா் மீதான வன்கொடுமைக்கு எதிரான கையொப்ப இயக்கத்தை நிறுவன இயக்குநா் வேணுகோபால் ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். கடலூா் சமூக நல அலுவலா் இ.சித்ரா அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் டி.குருமூா்த்தி விழிப்புணா்வு உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா் ஜெ.ஐ.பிரதிப் தேவராஜ், கடலூா் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்புத் தலைவா் கே.தா்மலிங்கம், ஹெல்ப்பேஜ் இந்தியா துணை இயக்குநா் எஸ்.சத்தியபாபு மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் பி.பாரத்வேல் நன்றி கூறினாா்.