அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
முப்பெரும் விழாவில் பேசுகிறாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா்.
முப்பெரும் விழாவில் பேசுகிறாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சரளா வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தும் மாணவா்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவா். தமிழக அரசு நான் முதல்வன் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி, மாணவா்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. ரூ.13 கோடியில் புதிய கல்லூரி கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா். முன்னதாக, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்விக்குழுத் தலைவா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா், வடலூா் திமுக நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேராசிரியா் மணிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com