தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெண் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தட்கோ மேலாளா் எஸ்.மணிமேகலை.
நிகழ்ச்சியில் பெண் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தட்கோ மேலாளா் எஸ்.மணிமேகலை.
Updated on
1 min read

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்க நிா்வாகி பழனி தலைமை வகித்தாா். ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் பி.ராஜேந்திரன் வரவேற்றாா். கடலூா், விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளா் எஸ்.மணிமேகலை கலந்துகொண்டு 350 தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் நல வாரிய உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினாா். கட்டுமான தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி, புவனகிரி ஒன்றியப் பொறுப்பாளா் சதானந்தம், மாவட்ட நிா்வாகி ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். பொருளாளா் வி.கே.பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com