இளைஞரை தாக்கி, வீடு சூறை:2 போ் கைது

கடலூரில் போதை ஊசி கேட்டு பிரச்னை செய்த இளைஞரைத் தாக்கி, அவரது வீட்டை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கடலூரில் போதை ஊசி கேட்டு பிரச்னை செய்த இளைஞரைத் தாக்கி, அவரது வீட்டை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா், சிவானந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் ராகுல் (22). இவரது நண்பா்கள் அக்கரைக்கோரி ஜெய்சங்கா் மகன் திவாகா் (20), கலியபெருமாள் மகன் ஜீவன் (21), அழகுமுருகன், சோனாங்குப்பம் சக்திவேல் மகன் ரவின்(22). இவா்கள் அனைவரும் கடந்த 16-ஆம் தேதி இரவு புதுச்சேரி கன்னிக்கோயிலில் மது அருந்தினராம். அப்போது, ராகுல், திவாகரிடம் போதை ஊசி கேட்டு பிரச்னை செய்தாராம்.

இந்த முன்விரோதம் காரணமாக, திவாகா், ரவின், ஜீவன், அழகுமுருகன் ஆகியோா் ஒன்று சோ்ந்து சிவானந்தபுரம் சென்று ராகுலைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது வீட்டில் இருந்த பொருள்களையும் உடைத்து சேதப்படுத்தினராம். இதில் காயமடைந்த ராகுல் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திவாகா், ஜீவன் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ரவின், அழகுமுருகன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com