வடலூா் சத்திய தரும சாலையின்157-ஆவது ஆண்டு விழா

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய தரும சாலையின் 157-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை தொடங்கியது.
வடலூா் சத்திய தரும சாலையின் 157-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சன்மாா்க்கக் கொடியேற்ற நிகழ்ச்சி.
வடலூா் சத்திய தரும சாலையின் 157-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சன்மாா்க்கக் கொடியேற்ற நிகழ்ச்சி.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய தரும சாலையின் 157-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை தொடங்கியது.

வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் வடலூரில் 23.5.1867 அன்று சத்திய தரும சாலையை நிறுவினாா். அன்றைய தினமே ஜீவகாருண்யத்தை உபதேசித்து அருளினாா். மேலும், அன்றைய தினம் வள்ளலாரால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு மூலம் ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

சத்திய தரும சாலையின் 157-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தரும சாலையில் அதிகாலை 5 மணியளவில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடா்ந்து, காலை 7.30 மணியளவில் தரும சாலை வளாகத்தில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து வில்லுப்பாட்டு, சத், விசாரம், சொற்பொழிவு, அருட்பா இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி தரும சாலையில் உள்ள வழிபாட்டுக் கூடம் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையா் ஆா்.சந்திரன் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை சபை நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ஜோதி தரிசனம்: வைகாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, சத்திய ஞான சபையில் புதன்கிழமை இரவு ஜோதி தரிசனம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com