வீட்டுக் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், சந்தப்பேட்டை, செட்டியாா் தெருவைச் சோ்ந்த ஜெகன்மோகன் மனைவி மல்லிகா (65). இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலம் சென்றாா். இந்த நிலையில், இவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், 168 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com