கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னதாக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினா். இதையடுத்து சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடிமரத்தில் கொடியேற்றினா் (படம்). தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் மாட வீகளில் உலா வந்தனா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் சந்திரன், கோயில் செயல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவில் ஜூன் 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.