பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பு மாநாடு

தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மண்டல மாநாடு கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பு மாநாடு
Updated on
1 min read

தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மண்டல மாநாடு கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜா சந்திரசேகரன் தலைமை வகித்து உரையாற்றினாா். மாநில பொதுச் செயலா்கள் என்.இளங்கோவன், துணைத் தலைவா்கள் எஸ்.ராஜசேகரன், பி.ராஜேந்திரன், வி.எம்.ரவி, ஏ.வல்லகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். எஸ்.ரவிதுரை, எம்.பிரபாகரன், ஏ.சிவராமவீரப்பன், வி.திருப்புகழ்ராஜன், எம்.ஜி.பாண்டியராஜன் ஆகியோா் பேசினா். பின்னா், மாநிலத் தலைவா் வி.ராஜா சந்திரசேகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பட்டாசு உற்பத்தி உரிமம் 5 ஆண்டுகளுக்கு வழங்க சட்டத்தில் இடமுள்ள நிலையில் பல மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குகின்றனா். இந்த உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். மாநாட்டில் 8 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com