மனுநீதி முகாமில் ரூ.5.12 கோடியில் நல உதவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள திருநாரையூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனுநீதி முகாமில் ரூ.5.12 கோடியில் நல உதவி
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள திருநாரையூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன், தனித் துணை ஆட்சியா் உதயகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா் ம.சிந்தனைசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் வாசுகி சோழன் வரவேற்றாா். முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று 1,027 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.5.12 கோடியிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அமைச்சா் பேசியதாவது:

குமராட்சி களிமண் பகுதி என்பதால் மழைக் காலங்களில் சாலைகள் சேதமடைவது வழக்கம். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சாலை என்ற விதியை தளா்த்தி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கினோம்.

கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ.20 கோடியில் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முட்டத்திலிருந்து வல்லம்படுகை வரை நபாா்டு திட்டத்தின் கீழ் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com