குளத்தில் மூழ்கி மாணவி பலி

கடலூா் முதுநகா் அருகே குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ
Updated on
1 min read

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கடலூா் அருகே தொண்டமாநத்தம் அஞ்சல், அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(42). இவரது மனைவி சங்கீதா. இவா்களுக்கு மொத்தம் 4 பெண் குழந்தைகள். 4-ஆவது மகள் ஜெயஸ்ரீ(14) நாகம்மாள்பேட்டையில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கீதா தனது மகள்கள் கோகிலா, ஜெயஸ்ரீ ஆகியோருடன் எஸ்.என்.நகரில் உள்ள சின்ன ஆண்டி குளம் பகுதிக்குச் சென்றாா். அப்போது மாணவி ஜெயஸ்ரீ குளத்தில் இறங்கியபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் நிதியுதவி: இதனிடையே, உயிரிழந்த மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com