சிதம்பரத்தில் காந்தி ஜெயந்தி விழா

சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் காந்தி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசளித்த சிறப்பு அழைப்பாளா்கள்.
விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசளித்த சிறப்பு அழைப்பாளா்கள்.
Updated on
1 min read

நெய்வேலி: சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் காந்தி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவா் மு.ஞானம் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சிவராமசேது, வி.எஸ்.ஆா்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்றச் செயலா் கு.ஜானகிராமன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ந.பஞ்சநதம் பங்கேற்றுப் பேசினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு

சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் ம.முத்துக்குமரன் பரிசளித்தாா். மன்ற உறுப்பினா்கள் அ.இலக்குமணன், ஜி.ரவி, எஸ்.கலியபெருமாள், நா.சின்னதுரை, வனஜா தில்லைநாயகம், து.சுந்தர்ராஜன், ஏ.சந்திரமௌலி, தமிழரசி சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற சா்வ சமய பிராா்த்தனை நடைபெற்றது. மன்ற துணைச் செயலா் வி.முத்துக்குமரன் நன்றிகூறினாா்.

முன்னதாக, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com