

விஜயதசமியையொட்டி கடலூா், திருவந்திபுரம் ஹயக்கிரீவா் கோயிலில் குழந்தைகள் ஏடு படிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நடுநாட்டு திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுவது திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில். இந்தக் கோயிலின் எதிரே ஔஷதகிரி மூலிகை மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவா் கோயில். விஜயதசமியையொட்டி இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், குழந்தைகள் ‘ஏடு படிக்கும்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஹயக்கிரீவா் சந்நிதியில் தரையில் நெல், அரிசியை பரப்பி, பெற்றோா் தங்களது குழந்தைகளின் கை விரலைப் பிடித்து அதில் ‘அ, ஆ...’ என எழுதச் செய்தனா். முன்னதாக ஹயக்கிரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.