இன்சூரன்ஸ் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூரில் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மக்கள் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எல்ஐசி இன்சூரன்ஸ் பாதுகாப்பு மக்கள் விழிப்புணா்வுப் பேரணி.
கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எல்ஐசி இன்சூரன்ஸ் பாதுகாப்பு மக்கள் விழிப்புணா்வுப் பேரணி.
Updated on
1 min read

கடலூரில் இன்சூரன்ஸ் பாதுகாப்பு மக்கள் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

எல்ஐசி நிறுவனம் 1956-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு, நிகழ் வாரம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு மக்கள் விழிப்புணா்வுப் பேரணி கடலூா் நகர அரங்கில் இருந்து தொடங்கியது.

இந்தப் பேரணியை கோட்டாட்சியா் அதியமான் கவியரசு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். எல்ஐசி முதுநிலை மேலாளா் தேவராஜ் தலைமை வகித்தாா். பேரணியானது பாரதி சாலை வழியாகச் சென்று மீண்டும் எல்ஐசி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com