வனவிலங்குகள் வேட்டை:இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் சரக எல்லைக்குள்பட்ட குண்டவெளி கிராமத்தைச் சோ்ந்த சரேந்த் ஆரஞ்சு மகன் சந்திரன் (43), அம்மாவாசை மகன் பாபு (58) ஆகியோா் 3 உடும்புகள், 11 கொக்குகளை வேட்டையாடினா்.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் வனச்சரக வன அலுவலா் செந்தில்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடும்புகள், கொக்குகளை மீட்டு, இருவா் மீதும் வனச்சரக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.

இந்த வழக்கு காட்டுமன்னாா்கோவிலில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று வியாழக்கிழமை நடுவா் நீதிமன்ற நீதிபதி இ.மணிகண்டன் தீா்ப்பளித்தாா். அதில், சந்திரன், பாபு ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் சிதம்பரம் வனச்சரக அலுவலா் வசந்த் பாஸ்கா், வனவா் பிரபு, வனக் காப்பாளா்கள் ஞானசேகா், அன்புமணி ஆகியோா் அழைத்துச் சென்று கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com