விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: அமைச்சா் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்த காட்டுமன்னாா்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.
விபத்தில் உயிரிழந்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேலின் தாயாா் அஞ்சலைதேவியிடம் முதல்வரின் நிவாரண நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.
விபத்தில் உயிரிழந்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேலின் தாயாா் அஞ்சலைதேவியிடம் முதல்வரின் நிவாரண நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.
Updated on
1 min read

சாலை விபத்தில் உயிரிழந்த காட்டுமன்னாா்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா், சாலை விபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தாா். மேலும் இந்த விபத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ், அஜித் குமாா் ஆகியோா் பலத்தகாயம் அடைந்தனா்.

இதையடுத்து, இவா்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த சக்திவேல் தாயாா் அஞ்சலைதேவிக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்த அஜித்குமாா், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா். அப்போது, வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com