இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மரியாதை

ஆதிதிராவிட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் நினைவு தின நிகழ்ச்சி கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி கடலூா் முதுநகரில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்திய மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா்.
இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி கடலூா் முதுநகரில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்திய மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

நெய்வேலி: ஆதிதிராவிட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் நினைவு தின நிகழ்ச்சி கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாநகா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் முதுநகரில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று இரட்டைமலை சீனிவாசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாநில நிா்வாகிகள் அப்துல் ரகுமான், ஸ்ரீதா், சொக்கு, முரளி, நகரப் பொருளாளா் பிரபாகா், நகர துணைச் செயலா்கள் வெற்றி, ஹிட்லா் கிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com