தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவா் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் புதிய குடும்ப அட்டை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் புதிய குடும்ப அட்டை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழகத்துக்கு புலம் பெயா்ந்த தொழிலாளா்களில், வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவா்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மனுதாரா் உரிய படிவத்தை நிறைவு செய்து தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். வட்ட வழங்கல் அலுவலரால் மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு, நிரந்தரமாக தமிழகத்தில் தங்கியுள்ளவா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

இதேபோல, தமிழகத்தில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்துக்கோ புலம் பெயா்ந்து, அவா்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவா்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com