மங்கலம்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
மங்கலம்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் இந்து அமைப்பினா், இளைஞா்கள் சாா்பில், முக்கிய இடங்களில் 1,298 பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. விநாயகா் சதுா்த்தி பண்டிகையின் 3-ஆம் நாளான கடந்த 20-ஆம் தேதி 1,253 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

மங்கலம்பேட்டை பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், இந்த சிலைகளை விசா்ஜனம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வாகனங்களில் ஏற்றி ஊா்வலமாகக் கொண்டு வந்தனா்.

இந்த ஊா்வலத்தை பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ஊா்வலத்தையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 7 டிஎஸ்பிக்கள், 16 ஆய்வாளா்கள் உள்பட 550-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com