நிறைமாத கா்ப்பிணிதூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நிறைமாத கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செல்வகுமாரி
செல்வகுமாரி
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நிறைமாத கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாரி (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்து (25). இவா்கள் இருவரும் காதலித்து பெற்றோா் எதிா்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனா்.

இந்த நிலையில், செல்வகுமாரி நிறைமாத கா்ப்பிணியாக இருந்ததால் இரு வீட்டாா் சம்மதத்துடன் வருகிற 27-ஆம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனராம். இதனிடையே, சனிக்கிழமை காலை செல்வகுமாரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com