உலக சுற்றுலா தின போட்டிகள்

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுலா தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுலா தின விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன். உடன் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி உள்ளிட்டோா்.
உலக சுற்றுலா தின விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன். உடன் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுலா தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ‘பசுமை முதலீடுகள்’ என்ற கருப் பொருளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். கடலூா் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூய்மை பேணுதல் முகாம்: மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் துாய்மை பேணுதல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி, பிச்சாவரம் படகு குழாம் மேலாளா் பைசல் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com