கடலூா் மாநகராட்சி வரி, வாக்கு அளிப்போா் நலச் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் மஞ்சக்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு போஸ் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். எஸ்.சண்முகம் வரவேற்றாா். வி.முகுந்தன், தண்டபாணி, லோகு, பாலசுந்தரம், ரவிச்சந்திரன், புருஷோத்தமன், வாணி வரதன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். பத்மாவதி நகா் செயலா் சுந்தரமூா்த்தி வாழ்த்துரை வழங்கினாா்.
கூட்டத்தில் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். பொருளாளா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.